கோவைப்புதூரில் திருட முயன்றவர்களுக்கு தர்ம அடி!!

published 1 year ago

கோவைப்புதூரில் திருட முயன்றவர்களுக்கு தர்ம அடி!!

கோவை: கோவையில் மாஜி வங்கி அதிகாரி வீட்டில் திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

கோவைப்புதூர் ஆல்பா நகரை சேர்ந்தவர் சேகர் மனைவி திலகம்(67). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது கணவருடன் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு வந்த 2 மர்மநபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 6 வெள்ளி டம்ளர்களை திருடி தப்பி செல்ல முயன்றனர். இதனைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் வெள்ளிப்பொருட்களுடன் தப்பி சென்று விட்டார். 

உடனே அக்கம்பக்கத்தினர் இது குறித்து போனில் திலகத்திடம் தெரிவித்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட அந்த நபரை குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது திருப்பூர் திருவிக நகரை சேர்ந்த சந்தோஷ்குமார்(38) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe