கோவையில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட உறுதிமொழியேற்பு!

published 1 year ago

கோவையில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட உறுதிமொழியேற்பு!

கோவை: காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என பல்வேறு மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காந்தியடிகள் நினைவு தினத்தை  மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க தமிழக முதல்வர் வேண்டு கோள் விடுத்திருந்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்,.மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து கோவையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. சாய்பாபாகாலனி பகுதியில்  நடைபெற்ற இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில்  இந்து,இஸ்லாமியர், கிறிஸ்தவ பாதிரியார், சீக்கியர் என அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காந்தியடிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்னும் கருப்பொருளில் உறுதிமொழி ஏற்றனர். இதில்,மனிதநேயம் காப்போம்,மத வெறியை விலக்குவோம்.வேற்றுமையில் ஒற்றுமை காப்போம். மதவெறி சக்திகளை வேரறுப்போம். பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம். அமைதியான இந்தியாவை உருவாக்குவோம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe