பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தங்க நகைகளை பறித்து சென்ற நபர் கைது...

published 1 year ago

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தங்க நகைகளை பறித்து சென்ற நபர் கைது...

கோவை: கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் தங்க நகையை பறித்து சென்ற நபரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும்  மல்லிகா என்பவரின் வீட்டிற்குள் கடந்த 31ம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி  13 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தலைமறைவான குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் தலைமறைவான குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்ட ஜோதிபுரம் பகுதியைச்  டான் போஸ்கோ என்பவரை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து, 13 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe