விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுதல் எப்படி?

published 1 year ago

விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுதல் எப்படி?

கோவை: அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் கோவையில் விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் அவர்களின் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கங்களை கிராம மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொட்டையாண்டிபுரம்பு பகுதியில் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாமினை நடத்தினர்.பொட்டையாண்டிபுரம்பில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், கடும் இழப்பினை சந்திக்கின்றனர். இந்த நிலையில் தக்காளியை எவ்வாறு மதிப்புக்கூட்டி விற்பது என்பது குறித்து மாணவர்கள் விளக்கினர். மேலும் பாலில் மதிப்புக்கூட்டுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பால் புட்டிங்,உலர்ந்த தக்காளி பெரிய அளவில் தயாரித்தல், அவற்றை எவ்வாறு சந்தை படுத்துதல் போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்பு விவசாயிகளுக்கு தேவையான இணைய விரிவாக்க சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அளித்தனர். வேளாண்‌ கல்லூரி  மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர்  சுதீஷ் மணாலில் வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe