சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை- போலிசார் விசாரணை...

published 1 year ago

சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை- போலிசார் விசாரணை...

கோவை: கோவை சிங்காநல்லூரில் வீட்டு பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் சேதுராமன் (79). இவர் கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டு பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் பதிவாகியிருந்த ஒரு கைரேகை பதிவை கைப்பற்றினர். மேலும் அந்த அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe