கோவையில் டாஸ்மாக்கில் சத்தமாக பேசிய வாலிபர் மீது தாக்குதல்...

published 1 year ago

கோவையில் டாஸ்மாக்கில் சத்தமாக பேசிய வாலிபர் மீது தாக்குதல்...

கோவை: கோவையில் டாஸ்மாக் பாரில் சத்தமாக பேசிய வாலிபரை தாக்கிய 3 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(32). இவர் சில நாட்களுக்கு முன்பு கோவை பீளமேடு காந்திமாநகரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று கிருஷ்ணசாமி பீளமேட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு தனது நண்பர்கள் சிலருடன் சென்றார். பின்னர் அங்கு மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 3 பேர் கும்பல், அவர்களிடம் ஏன் இவ்வளவு சத்தமாக பேசுகிறீர்கள், மெதுவாக பேசுங்கள் என தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி கிருஷ்ணசாமியை தாக்கினர். அங்கிருந்த மதுபாட்டிலால் தாக்கியதில் கிருஷ்ணசாமிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. 

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe