கோவையில் போலீஸ் போல நடித்து நூதன மோசடி!

published 1 year ago

கோவையில் போலீஸ் போல நடித்து நூதன மோசடி!

கோவை: வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது என கூறி போலீஸ் போல நடித்து ஜூவல்லரி மேலாளரிடம் ரூ. 9 லட்சம் நூதன மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் நடராஜன்(38). இவர் கோவையில் உள்ள ஜூவல்லரி கம்பெனியில் மேலாளராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய மர்ம நபர், நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து புதிய செல்போன் இணைப்பை பெற்றுள்ளீர்கள்.

அந்த செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நான் கொடுக்கும் மீட்டிங் ஐடி மூலம் மும்பை போலீசில் வீடியோ காலில் பேசுங்கள் என இணைத்து கொடுத்துள்ளார். அப்போது போலீஸ் போல் பேசிய நபர், உங்கள் வங்கி கணக்கிற்கு சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னையை இத்தோடு முடித்து கொள்ள நீங்கள் எங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன கார்த்திகேயன் நடராஜன் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 8.96 லட்சம் அனுப்பினார். அதன்பிறகுதான் தன்னை மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்து கார்த்திகேயன் நடராஜன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe