கோவையில் செருப்பு கடையில் திருட முயற்சி…

published 1 year ago

கோவையில் செருப்பு கடையில் திருட முயற்சி…

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் லதா(43). இவர் அதேபகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை 5 மணியளவில் அவரது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கட்டிட உரிமையாளர் பார்த்து லதாவுக்கு தகவல் கொடுத்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த லதா கடைக்கு சென்று பார்த்த போது, பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து லதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe