கவுண்டம்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்…

published 1 year ago

கவுண்டம்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்…

கோவை: கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடையர்பாளையம் ரோடு புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகம் படும் படி நின்றிருந்தார். 

போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்த போது அந்த வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த முகமத் ரஷீக்(22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe