கோவையில் மத்திய அரசை கண்டித்து அடையாள தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனக் கூட்டுக்குழு...

published 1 year ago

கோவையில் மத்திய அரசை கண்டித்து அடையாள தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனக் கூட்டுக்குழு...

கோவை: கோவையில் மத்திய அரசை கண்டித்து இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஒரு நாள் அடையாள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கடந்த 2022 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும், அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் நாடு முழுவதும் இன்று ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலக வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்தக்கட்டமாக வருகின்ற 28 ஆம் தேதி நாடு முழுவதும் 1 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe