மாநகரில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும்- மாநகர காவல்துறையும் மாநகராட்சியும் எச்சரிக்கை...

published 1 year ago

மாநகரில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும்- மாநகர காவல்துறையும் மாநகராட்சியும் எச்சரிக்கை...

கோவை: கோவை மாநகரில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள் வயர்களையும் 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என கோவை மாநகர காவல் துறையும் கோவை மாநகராட்சியும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்
தெருவிளக்கு கம்பங்களிலும்,  மின்கம்பங்களிலும் மாநகராட்சி 
மற்றும் காவல் துறை அனுமதியின்றி இணையதள கேபிள்,
உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் மற்றும் அலைபேசி கேபிள்
போன்ற கேபிள்கள் உள்ளன.

இந்த கேபிள்கள் மூலமாக
மாநகரின் அழகியல் குறைவதுடன் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. பிரதான சாலைகள்
சந்திப்பில் வயர்கள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15- நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் சம்மந்தப்பட்ட தனியார்
நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான
நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe