கோவையில் ஆசீர்வாதம் செய்வது போல் ஆட்டைய போட்ட திருநங்கைகள்…

published 11 months ago

கோவையில் ஆசீர்வாதம் செய்வது போல் ஆட்டைய போட்ட திருநங்கைகள்…

கோவை: கோவையில் வாலிபரை ஆசீர்வாதம் செய்வது போல நடித்து பணம் பறித்த திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் அய்யனார்(20). கல்லூரி மாணவர். இவர் பகுதி நேர வேலையாக டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அய்யனார் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் பொருட்கள் டெலிவரி எடுப்பதற்காக நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் அய்யனாரிடம் ஒரு ரூபாய் கேட்டனர்.

அவர் கொடுத்தவுடன் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டு அவர் கொடுத்த ஒரு ரூபாயை அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்தனர். பின்னர் நைசாக அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பினர்.

இது குறித்து அய்யனார் ஆர்எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அய்யனாரிடம் பணம் பறித்தது கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த திருநங்கைகள் கருப்பு (எ) காவ்யா(32) மற்றும் பரமசிவம் (எ) ஷிவானி(35), என்பது தெரியவந்தது.

போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe