கோவையில் கடைக்குள் புகுந்து 40 கிலோ பித்தளை பொருட்கள் திருட்டு- குற்றவாளியை தேடும் போலிசார்...

published 11 months ago

கோவையில் கடைக்குள் புகுந்து 40 கிலோ பித்தளை பொருட்கள் திருட்டு- குற்றவாளியை தேடும் போலிசார்...

கோவை: கோவையில் கடைக்குள் புகுந்து 40 கிலோ பித்தளை பொருட்கள் திருடியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை வடவள்ளி வஉசி நகரை சேர்ந்தவர் செல்வரத்தினம்(43). இவர் ராஜவீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி செல்வரத்தினம் வழக்கம்போல வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கடையை திறக்க வந்தார். அப்போது 3வது மாடியின் கதவு திறந்து கிடந்தது. 

உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 40 கிலோ பித்தளை பொருட்கள் மற்றும் ஒரு காஸ் ஸ்டவ் திருடு போயிருந்தது தெரியவந்தது. கடைக்குள் புகுந்த மர்ம நபர் திருடி சென்று தப்பியுள்ளார். இவற்றின் மதிப்பு ரூ. 35 ஆயிரம் ஆகும். இது குறித்து செல்வரத்தினம் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe