கோவையில் பெண் ஆசிரியரை கட்டிப்போட்டு கொள்ளை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 11 months ago

கோவையில் பெண் ஆசிரியரை கட்டிப்போட்டு கொள்ளை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (வயது 70).  ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். வீட்டில் தனியாக வசித்து வருகிறார் (திருமணமாகாதவர்). 

நேற்றிரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது  இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க வழியாக நுழைந்து கத்தியை காட்டி விஜயலட்சுமியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின், 4 பவுன் வளையல், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்து மேலும் நாற்காலியில் கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் விஜயலட்சுமி மீட்கப்பட்டதை தொடர்ந்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் அவரை அப்பகுதி மக்கள் பிடிக்க முயல்வதும் பதிவாகி உள்ளது.

மேலும் விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இரண்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் உள்ள ஸ்டிக்கர்களை கொண்டு அந்த மதுபானங்கள் எந்த மதுபான கடையில் வாங்கப்பட்டது என்றும் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது மர்ம நபர்கள் இருவரும் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/VBTqSGM_K7w?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe