பக்தர்களின் பக்தி வெள்ளத்திற்கு மத்தியில் அருள் பாலித்த கோவையின் காவல் தெய்வம்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத நல்லிணக்கம்...

published 11 months ago

பக்தர்களின் பக்தி வெள்ளத்திற்கு மத்தியில் அருள் பாலித்த கோவையின் காவல் தெய்வம்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத நல்லிணக்கம்...

கோவை: கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில்  திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன்
துவங்கியது. நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாலித்தார்.

 

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கி  எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். தேரானது ராஜவீதியில் தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து,தேர் மீது உப்பு வீசி வழிபட்டனர்.

 

இந்த தேர் திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒப்பணக்கார வீதி அத்தர் ஜாமத் பள்ளி வாசல் இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அனைவரையும் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe