வெய்யிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? பொது சுகாதாரத்துறை அறிக்கை!

published 11 months ago

வெய்யிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? பொது சுகாதாரத்துறை அறிக்கை!

கோடை வெய்யிலினால் ஏற்படும் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கோடை வெய்யிலின் வெப்பத்தாக்கம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பநிலையும் மாறுகிறது. சாதாரண நிலையிலிருந்து வெப்பநிலை உயரும்போது காய்ச்சல் தொற்று ஆக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தட்டம்மை (Measles), சின்னம்மை (Chicken Pox) பொன்னுக்கு வீங்கி (Mumps) ஆகிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

வேர்வை, சோர்வு, நடுக்கம், தலைவலி, தசைப்பிடிப்பு, பசியின்மை, நீர் சத்து குறைபாடு போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

அம்மைநோய் ஒரு வகை வைரஸினால் பரவும் நோயாகும். இது எளிதில் பரவும். இந்நோய் பொதுவாக சிறுவர்களை எளிதில் தாக்கும்.

நோயின் அறிகுறிகள்(Mumps) காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும் காய்ச்சல், கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும் போதோ, அல்லது விழுங்கும் போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

சின்னம்மையின் (Chicken Pox) அறிகுறிகள் : உடலில் நீர் கட்டியைப்போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்துக் காணப்படும் கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

தட்டம்மையின்(Measles) அறிகுறிகள் இந்நோய்க்கு மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல்,

கண்ணில் நீர் வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றும். கண்கள் சிவந்து வீக்கமாக காணப்படும்.

இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும். மேற்கண்டால் இந்நோழி பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், தும்மல் அல்லது இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்துகொள்வதின் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. அம்மை ஒரு வைரஸ் தொற்று என்பதால், இரண்டு வாரங்களில் இந்நோய் தானாகவே சரியாகிவிடும். எனினும் மருத்துவரின் ஆலோசனைபடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். 

நோய் பரவாமல் தடுக்க நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதின் (Isolation) மூலம் மற்றவர்க்கு பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

வெய்யிலிளிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி நீர் அருந்தவேண்டும். இளநீர், பழங்கள், பழச்சாறுகள், மற்றும் ORS கரைசல் போன்றவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம் போன்ற குளிர்ச்சியான பானங்களை தவிர்க்க வேண்டும்.

பருத்தியிலான(Cotton) தளர்வான உடைகளையே அணிய வேண்டும். வெயிலில் சுற்றுவதை தவிர்த்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இருக்கமாக உடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் பாலியஸ்டர். நைலான் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும்.

தட்டம்மை(Measles), பொன்னுக்கு வீங்கி(Mumps) மற்றும் சளி, காய்ச்சல் இருந்தால், உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, அல்லது அரசு மருத்துவமனைக்கோ தெரியப்படுத்தி, சிகிச்சையினை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe