கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்...

published 11 months ago

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்...

கோவை: கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டு துறை சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் இஸ்ரோ விண்வெளி சந்திராயன் திட்ட ஆராய்ச்சி தலைவர் வீரமுத்துவேல் பங்கேற்றார்.

 

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், முதுகலை கணினிப் பயன்பாட்டுத் துறை சார்பில்  தேசிய அளவிலான  தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்ற.  "கிளஸ்டர் 2k24",  என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கணினிப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள்  தங்கள் அறிவையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.  

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் டி.ஆர். கே சரசுவதி, கல்லூரியின் நிர்வாக செயலர் பிரியா, முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர்  கே கருணாகரன்  கல்லூரியின் முதல்வர்   அ.பொன்னுசாமி  கணினிப் பயன்பாட்டியல் துறையின் பேராசிரியர் முனைவர் ஏ வி செந்தில்குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரான இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநரான டாக்டர்.பி.வீரமுத்துவேல், கலந்து கொண்டார்.

இதில் சந்திரயான்-3 திட்டம் குறித்தும்  விண்கலத்தை வடிவமைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் பொறியியல் அற்புதங்களையும்  விளக்கினார்.  இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe