கோவையில் மகனுக்காக உயிரை விட்ட தந்தை!

published 11 months ago

கோவையில் மகனுக்காக உயிரை விட்ட தந்தை!

கோவை: குனியமுத்தூர் குறிச்சி நகரை சேர்ந்தவர் முகமத் தஸ்தகீர்(49). நகைப்பட்டறை தொழிலாளி. 

இவரது மகன் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் முகமத் தஸ்தகீர் தனது மகனை நினைத்து கடும் மன வேதனையில் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முகமத் தஸ்தகீர் நேற்று முன்தினம் சயனைடு குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe