தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! 5 நாட்களில் ரூ.1,760 அதிகரிப்பு!

published 11 months ago

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! 5 நாட்களில் ரூ.1,760 அதிகரிப்பு!

தங்கம் விலை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பவுன் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

தங்கம் விலை யாரும் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலக நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தின் மீது வைப்பதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியப்படும் நிலையில் கிராம் ரூ.6 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.45 அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.1,760 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.360 விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,150க்கும், பவுன் ரூ.49,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.296 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5038க்கும் ஒரு பவுன் ரூ.40,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20க்கும், ஒரு கிலோ வெள்ளி 79,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe