போத்தனூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு: பைக் ஆசாமிக்கு வலை!

published 11 months ago

போத்தனூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு: பைக் ஆசாமிக்கு வலை!

கோவை: கோவையில் பெண்ணிடம் 5 1/2 பவுன் நகை பறித்து தப்பிய பைக் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் - செட்டிபாளையம் ரோடு ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சித்தநாதன். இவர் செட்டிபாளையத்தில் சலூன் கடை வைத்துள்ளார். நேற்று இரவு சித்தநாதன் தனது மனைவி வசந்தகுமாரி(48) யுடன் ஈஸ்வர் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் பின்னால் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென வசந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த 5 1/2 பவுன் தங்க நகையை பறித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகை பறித்த மர்ம நபர் பைக்கில் தப்பி சென்று விட்டார். இது குறித்து அவர் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்து தப்பிய பைக் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe