துடியலூரில் இருதய நோய் குறித்தான விழிப்புணர்வு மாரத்தான்...

published 11 months ago

துடியலூரில் இருதய நோய் குறித்தான விழிப்புணர்வு மாரத்தான்...

கோவை: இருதயத்தை பாதுகாப்பதற்கு உடற்பயிற்சிகள் மற்றும் உணவு முறைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், கோவை துடியலூர் பகுதியில் ரன் ஃபார் ஹார்ட் எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

 

விஜி மருத்துவமனை சார்பாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தொடர்ந்து 5 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பெண்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் காவல் ஆணையாளரும் கலந்து கொண்டு ஓடினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe