குனியமுத்தூரில் பிளாஸ்டிக் குடோனில் தீ... ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

published 11 months ago

குனியமுத்தூரில் பிளாஸ்டிக் குடோனில் தீ... ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

கோவை: கோவை இடையர்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவராஜன்(48). இவரது மனைவி ஜோதிமணி(44). இவர்கள் பிகே புதூர் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகின்றனர்.

இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி மூலப்பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய துவங்கியது.

இதனை பார்த்த அங்கு தங்கியிருந்த ஊழியர்கள் உடனே தேவராஜனுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe