வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண கோரி உண்ணாவிரதம்…

published 11 months ago

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண கோரி உண்ணாவிரதம்…

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 


போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு நுழைவுவாயில் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன் தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், நாளை கோவை வர இருக்கின்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளலூர் குப்பை கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe