கோவையில் கஞ்சா விற்ற தொழிலாளி சிக்கினார்…

published 11 months ago

கோவையில் கஞ்சா விற்ற தொழிலாளி சிக்கினார்…

கோவை: கோவை வடவள்ளி போலீசார் நேற்று தொண்டாமுத்தூர் ரோட்டில் ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே ஒருவர் சந்தேகம்படும்படி நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடவள்ளி எம்ஜிஆர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கோபிநாத்(43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe