கோவையில் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு…

published 11 months ago

கோவையில் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு…

கோவை: கோவை பச்சாபாளையம் சரவணா நகரை சேர்ந்தவர் ராபர்ட் சிங். இவரது மனைவி அனிதா தேவி(33). இவர் தெலுங்கு பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். 

இவர் சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதற்காக பச்சாபாளையத்தில் இருந்து பஸ்சில் தெலுங்குபாளையம் சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அனிதா தேவியின் கழுத்தில் கிடந்த 2.5 பவுன் தங்க செயினை திருடி சென்றார். 

நகை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்த அனிதா தேவி செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe