கோவையில் வீட்டின் கதவை உடைத்து 6.5 பவுன் நகை திருட்டு...

published 11 months ago

கோவையில் வீட்டின் கதவை உடைத்து 6.5 பவுன் நகை திருட்டு...

கோவை: கோவையில் வீட்டு கதவை உடைத்து 6.5 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி கமலவேணி(53). இவர்கள் கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருக்குவளையில் நடந்த குடும்ப கோயில் விழாவுக்கு சென்றனர். 

இரண்டு நாட்கள் கழித்து அவர்களது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே செல்போனில் தொடர்பு கொண்டு கமலவேணியிடம் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து அவர்கள் நேற்று முன்தினம் கோவை திரும்பி வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த உடைமைகள் சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 6.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கமலவேணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe