கோவையில் செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு...

published 11 months ago

கோவையில் செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு...

கோவை: கோவையில் செல்போன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவர் மாடியில் இருந்து தவறி விழுந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் செபஸ்டியன் (49). கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் டேவிட் பிரிஜ் (24). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ., இறுதி ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று மாலை டேவிட் பிரிஜ் மாடிக்கு சென்றார். அங்கு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் வலியால் துடித்தார். 

உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே டேவிட் பிரிஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe