ரேஸ்கோர்ஸ் உணவகத்தில் சாப்பிடச் சென்றவரிடம் திருட்டு!

published 11 months ago

ரேஸ்கோர்ஸ் உணவகத்தில் சாப்பிடச் சென்றவரிடம் திருட்டு!

கோவை: கோவை தடாகம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ்(61). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.

இவர் நேற்று தனது சகோதரர் ஒருவருடன் காரில் கோவை மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ரேஸ்கோர்சில் உள்ள வங்கிக்கு சென்றனர். அங்கு ரூ. 3 லட்சம் பணம் எடுத்த நாகராஜ் காரில் வைத்தார்.

இதனையடுத்து வங்கி வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது காரில் வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை காணவில்லை.

மர்ம நபர் நைசாக கார் கதவை திறந்து திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நாகராஜை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவர் பணத்தை காரில் வைப்பதை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe