பங்குனி உத்திரம், பண்ணாரி குண்டம்- கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

published 10 months ago

பங்குனி உத்திரம், பண்ணாரி குண்டம்- கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

கோவை: பௌர்ணமி (24.03.2024), பங்குனி உத்திரம் (25.03.2024), பண்ணாரி குண்டம் (25.03.2024) மற்றும் வார இறுதி நாட்களான (23.03.2024 மற்றும் 24.03.2024) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பழனி, திருவண்ணாமலை, பண்ணாரி திருக்கோவில் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms


இது குறித்தான அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்.., சார்பாக பௌர்ணமி (24.03.2024), பங்குனி உத்திரம் (25.03.2024), பண்ணாரி குன்டம் (25.03.2024) மற்றும் வார இறுதி நாட்களான (23.03.2024 மற்றும் 24.03.2024) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து 

பழனி திருவண்ணாமலை, பண்ணாரி திருக்கோவில், மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் பழனி செல்ல 30 சிறப்பு பேருந்துகளும், திருவண்ணாமலைக்கு செல்ல 25 சிறப்பு பேருந்துகளும், பண்ணாரி திருக்கோவில் செல்ல 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe