துரோகம் செய்தவர்களுக்கு நாம் யார்? என காட்ட வேண்டும் - எஸ்.பி.வேலுமணி அதிரடி!

published 10 months ago

துரோகம் செய்தவர்களுக்கு நாம் யார்? என காட்ட வேண்டும் - எஸ்.பி.வேலுமணி அதிரடி!

கோவை: நம்மிடம் பேசிக்கொண்டே துரோகம் செய்தவர்களுக்கு நாம் யார் என காட்ட வேண்டும் என கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.

கோவை  சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, 
"எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக., வெற்றி பெற வேண்டும்.

அதிமுக., வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். களத்தில் யார் இருந்தாலும், நாம் தான் வெற்றி பெறுவோம். 3 வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

நமது வேட்பாளர்கள் 3 பேருக்கும் எம்ஜிஆர்., ஜெயலதிதா ஆசி உள்ளது.   மற்ற வேட்பாளர்கள் எல்லாம் தூசு. அதிமுக., பக்கத்தில் கூட வர முடியாது.

சோசியல் மீடியாவில் போட்டு கொண்டிருந்தால், பெரிய ஆளாக முடியாது. கணபதி ராஜ்குமார் யார்? அம்மா அவருக்கு மேயர், மாவட்ட செயலாளராக வாய்ப்பு தந்தார். இந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு திமுக.,வில் இணைந்துவிட்டார்.

திமுக.,வில் ஆளே இல்லையா?. திமுகவில் வேட்பாளராக தகுதி யாருக்கும் இல்லை. திமுக.,- அதிமுக., இடையே போட்டி தான். ஆனால் திமுக., வேட்பாளர் டம்மி.

பாஜக., வேட்பாளராக அண்ணாமலை கரூரில் நிற்காமல் கோவையில் நிற்கிறார். பாஜகவிற்கு 4 சதவீத ஓட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள பாமக., தமாகா., கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா?

அவர்கள் பயங்கரமாக வேலை செய்து 10 சதவீத ஓட்டு வாங்கினாலும் ஜெயிக்க முடியுமா? பாமக., பாஜக., கட்சிகள் அதிமுக., உடன் கூட்டணி வைத்து தான் வளர்ந்தார்கள்.

அதிமுக., தொண்டர்கள் தர்மப்படி, நியாயப்படி நடப்பார்கள் எனத் தெரிவித்தார்.  3 வருட திமுக ஆட்சியும், 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் கோவைக்கு என்ன செய்தது.

கோவைக்கு அதிக திட்டங்கள் தந்தது அதிமுக தான் என்றார். திமுக.,வினரே அக்கட்சிக்கு ஓட்டு போட தயாராக இல்லை. அதிமுக., வெற்றி உறுதி.

ஆனாலும் எதிரியை குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது, கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்.  நிறைய கட்சிகள் நம்மிடம் பேசிக்கொண்டே துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுக்கு நாம் யார் என காட்ட வேண்டும்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe