ஜெயிலுக்கு அனுப்பியதால் மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி…

published 10 months ago

ஜெயிலுக்கு அனுப்பியதால் மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி…

கோவை: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ரம்யா(30). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மதுரை யங்கப்பா நகரில் தனியாக வசித்து வந்துள்ளார். 

அப்போது அவருக்கு மதுரை ஜெய்ஹிந்த் புரம் நேதாஜி தெருவை சேர்ந்த வீர மனோகர்(37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ரம்யாவின் தந்தை முருகன், வீர மனோகரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதில் ரூ. 50 ஆயிரம் திருப்பி கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது. மீதமுள்ள ரூ. 50 ஆயிரம் கொடுப்பதில் வீர மனோகருக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இது குறித்த புகாரின் பேரில், மதுரை திடீர் நகர் போலீசார் வீர மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது ரம்யா தனது குழந்தைகளுடன் கோவை கணுவாய் வந்து தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த வீர மனோகர், ரம்யா கோவையில் வசிப்பதை அறிந்து அவரின் இருப்பிடம் கண்டறிந்து நேற்று கோவை வந்தார். 

கணுவாயில் உள்ள ஒரு மளிகை கடை அருகே நின்றிருந்த ரம்யாவிடம் வீர மனோகர் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் சாதியை சொல்லி திட்டி கீழே தள்ளி கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்தார். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர் அவரை மீட்டனர். வீர மனோகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். புகாரின் பேரில், போலீசார் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வீர மனோகரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe