கோவையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து…

published 10 months ago

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து…

கோவை: கோவையில் பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையார்பாளையத்தில் கண்ணப்பன் என்பவர் தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடோன்கள் சுரேஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தலையணை செய்யக்கூடிய பஞ்சுகள் இருந்துள்ளது.இந்நிலையில் மின் கசிவு காரணமாக குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது மலமலவென பிடித்ததால் அடுத்தடுத்த குடோனுக்கு பரவியாதால்  தீயணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று 
தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவையில்  தீ பிடித்ததால் கரும்புகை வான் உயரத்துக்கு எழுந்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய்  பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe