கோவை, உடுமலை, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

published 10 months ago

கோவை, உடுமலை, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

கோவை: திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னகரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

· ரயில் எண்.06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 07.04.2024 முதல் 26.05.2024 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 19.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

· ரயில் எண்.06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 08.04.2024 முதல் 27.05.2024 வரை திங்கட்கிழமைகளில் 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

பெட்டிகள்: ஏசி 2- அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள்.

நிறுத்தங்கள்: சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை ஜே., பொள்ளாச்சிப்பேட்டை, பொள்ளாச்சிப்பேட்டை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe