பெண் அதிகாரியுடன் தனிமையில் இருந்த வீடியோ எடுத்து மிரட்டல்-4 பேர் மீது வழக்கு…

published 10 months ago

பெண் அதிகாரியுடன் தனிமையில் இருந்த வீடியோ எடுத்து மிரட்டல்-4 பேர் மீது வழக்கு…

கோவை: தூத்துக்குடியை சேர்ந்தவர் 41 வயது பெண். இவர் கோவை தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பவருடன் கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. 

இருவரும் காதலித்து வந்தனர். அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அதனை விக்னேஷ் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காண்பித்து விக்னேஷ், அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த பெண், தனது உறவினர்களை அழைத்து கொண்டு கோவை ராம் நகரில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். 

அங்கு அவரது உறவினர்கள் விக்னேசை தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயச்சந்திரன், மீரா, ரமணி, பிரனேஷ் ஆகியோர் அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் விக்னேஷ் தான் எடுத்து வைத்துள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டிள்ளார். 

இதனால் பயந்து போன அந்த பெண் இதுகுறித்து கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ்(41), மற்றும் அவரது உறவினர்கள் ஜெயச்சந்திரன்(50), மீரா ரமணி(45), பிரனேஷ்(37) ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe