நான் உள்ளூரைச் சேர்ந்தவன் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்- திமுக வேட்பாளர் பிரச்சாரம்...

published 10 months ago

நான் உள்ளூரைச் சேர்ந்தவன் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்- திமுக வேட்பாளர் பிரச்சாரம்...

கோவை: கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் டெக்ஸ்டூல் பாலம், ரத்தினபுரி, கண்ணப்பநகர், சங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்தார்.  தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரச்சாரத்தின்போது, அவர் பேசுகையில்,

நான் உள்ளூரை சேர்ந்தவன் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை நீங்கள் சந்திக்கலாம், ஆனால், எனக்கு எதிராக போட்டியிடும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலையோ வெளியூரை சேர்ந்தவர், அவரை நீங்கள் சந்திக்க முடியாது. நான் மேயராக இருந்தவன், இங்குள்ள, மக்களின் தேவைகளை கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்வேன், உங்கள் கோரிக்கைகள் டெல்லியில் ஒளிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள், தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. 

சொல்லும் திட்டங்கள் மட்டும் அல்ல, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றிய அரசு திமுக அரசு. பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அளித்துள்ளது. திமுக வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்வதன் மூலம், ஒன்றிய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வருவேன், இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் பாசிச பாஜகவை வெல்ல வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது, நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe