கோவையில் தன்னிடம் பேச மறுத்த பெண்ணை பிளாக்மெயில் செய்த வாலிபருக்கு சிறை...

published 10 months ago

கோவையில் தன்னிடம் பேச மறுத்த பெண்ணை பிளாக்மெயில் செய்த வாலிபருக்கு சிறை...

கோவை: கோவைப்புதூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோவை பொன்னையராஜபுரம் கேசி தோட்டத்தை சேர்ந்த இம்மானுவேல்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி அடிக்கடி பேசி வந்தனர்.
 

இந்நிலையில், அந்த இளம்பெண் இம்மானுவேல் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த 2 வாரங்களாக அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதற்கிடையே இளம்பெண் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். நேற்று குளத்துப்பாளையம் ஜங்சன் அருகே இளம்பெண் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இம்மானுவேல் அவரை மறித்து தகராறு செய்தார். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி நீ என்னுடன் பழக மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்தார். 

மேலும் நாம் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாக மிரட்டி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இம்மானுவேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe