கோவையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…

published 10 months ago

கோவையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…

கோவை: நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தங்களது தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று கோவை வஉசி பூங்கா, ரயில் நிலைய வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கே9 என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe