கல்லூரி விடுதி வார்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

published 10 months ago

கல்லூரி விடுதி வார்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

கோவை: கோவை ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (58). இவர் கோவை அரசு கலைக்கல்லூரி விடுதியில் வார்டனாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயச்சந்திரன் விடுதி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களான வால்பாறையை சேர்ந்த கீர்த்திக் (22), குன்னுரை சேர்ந்த கௌதம் (22), ஹரி (22) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஜெயச்சந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். 

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்திக், கௌதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe