நாட்டிற்கான எனது முதல் வாக்கு- ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவை மாநகராட்சி நிர்வாகம்...

published 10 months ago

நாட்டிற்கான எனது முதல் வாக்கு- ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவை மாநகராட்சி நிர்வாகம்...

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்டும் வகையில் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தேர்தல் ஆணையம் இணைந்து 100% வாக்கு பதிவினை எட்டும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகர் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டல வளாகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி துணை ஆணையாளருமான செல்வ சுரபி தனியார் பங்களிப்புடன் ராட்சத பலூனை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த பலூனில் "நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என குறிப்பிட்டு தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe