கோவை அருகே கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்...

published 10 months ago

கோவை அருகே கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்...

கோவை: கோவை சரவணம்பட்டி போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது துடியலூர் ரோட்டில் உள்ள கல்லூரி அருகே சந்தேகம்படும் படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். 

அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரவணம்பட்டியை சேர்ந்த வினித்(25) மற்றும் கணபதி புதூரை சேர்ந்த ஜெகன்(27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.200 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe