செல்பி எடுத்ததை காட்டி பெண்னை மிரட்டிய நபர் கைது...

published 10 months ago

செல்பி எடுத்ததை காட்டி பெண்னை மிரட்டிய நபர் கைது...

கோவை: கோவையில் தன்னுடன் செல்பி எடுத்ததை காட்டி பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(46). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரே 46 வயது பெண் ஒருவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செல்பி எடுத்தார். 

இதனை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அந்த பெண்ணிடம் இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி போட்டோவை காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்து கருப்பசாமி டார்ச்சர் கொடுத்தார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து கருப்பசாமியை கண்டித்தார். இதற்கிடையே நேற்று அந்த பெண் தனது கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த கருப்பசாமி அவரிடம் மீண்டும் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அந்த பெண் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe