கோவையில் மாஜி வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை...

published 10 months ago

கோவையில் மாஜி வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை...

கோவை: கோவையில் மாஜி அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி(71). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காங்கயத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு அன்று இரவு வீடு திரும்பினர். 

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இது குறித்து குமாரசாமி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சென்று சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe