அண்ணாமலை பிரசாரத்தில் கேள்வி கேட்டவர் மீது தாக்குதல்!

published 10 months ago

அண்ணாமலை பிரசாரத்தில் கேள்வி கேட்டவர் மீது தாக்குதல்!

கோவை: அண்ணாமலை பிரசாரத்தில் கேள்விகேட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் பா.ஜ.க., வேட்பாளராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. அந்த வகையில் இன்று பல்லடத்தை அடுத்த பள்ளிபாளையத்தில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

 

பல்லடத்தில் விசைத்தறி மற்றும் அது சார்ந்த தொழிலாளர்கள் இருப்பதால், விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கூறி அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் 10 ஆண்டுகளில் விசைத்தறி தொழில் நலிவடைந்ததற்கு பா.ஜ.க., ஆட்சி தான் காரணம் என சத்தம் போட்டார். மேலும், அண்ணாமலையை நோக்கி கேள்வி எழுப்ப முயன்றார்.

இதனால் கடுப்பான பா.ஜ.க.,வினர் அவரை தாக்கி அங்கிருந்து விரட்டினர். இது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe