கோவையில் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் இறங்கிய கிராமம்…

published 10 months ago

கோவையில் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் இறங்கிய கிராமம்…

கோவை: கோவை புறநகர் சூலூரில் உள்ள கிராமம் ஒன்றில் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டம் மேற்கொண்டனர்.

 

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பொன்னாங்கண்ணி என்ற கிராமம் இருந்து வருகிறது இந்த கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான விலை நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவை ஆக கொடுக்கப்பட்டதாகவும் அந்த நிலங்களை வாங்கவோ வைக்கவும் முடியாது என அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அவர்களுடைய இருப்பிடத்தை விற்க முடியாமலும் என்னவென்று செய்வதென்று தெரியாமலும் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய நிலங்களின் உரிமையை உறுதி செய்திட கோரி கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe