கூகுள் பே-வில் பணம் இல்லாததால் ஆத்திரம்- வாலிபர் மீது தாக்குதல்...

published 10 months ago

கூகுள் பே-வில் பணம் இல்லாததால் ஆத்திரம்- வாலிபர் மீது தாக்குதல்...

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் தியாகி குமரன் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்(27). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஜீவானந்தம் தெரு ஜங்சனில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை 2 பேர் வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், 2 பேரும் அவரது செல்போனை மிரட்டி வாங்கி கூகுள் பே-வில் பணம் அனுப்புமாறு கேட்டனர். அப்போது ரகசிய எண்ணை கேட்டு பெற்று அவரது வங்கி இருப்பை பார்த்தபோது அதில் பணம் இல்லை. 

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அரவிந்தனின் செல்போனை உடைத்து அவரை தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து அரவிந்தன் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், வாலிபரை தாக்கி செல்போனை உடைத்தது சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஹரிபாபு(29), பிஎன் புதூர் கோகுலம் காலனியை சேர்ந்த மதன்விக்னேஷ்(27) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe