கோவையில் தொழில் போட்டியில் ஈடுபட்ட 3 பேர் கைது...

published 2 weeks ago

கோவையில் தொழில் போட்டியில் ஈடுபட்ட 3 பேர் கைது...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CQ78cBq2Gn00cQtG7fXjDn


தொழில் போட்டியில் மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை, ஏப் 14-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் விமல்ராஜ்(25). இவர் கோவை சாயிபாபா காலனியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. இதனால் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று ஒரே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்வதில், விமல்ராஜூக்கும், கோவில்மேடு வஉசி நகரை சேர்ந்த சுதாகர்(31), அவரது அண்ணன் சிவா(33), தம்பி சங்கர்(28) ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பி 3 பேரும் சேர்ந்து பைப்பால் விமல்ராஜை சரமாரியாக தாக்கினர். இது குறித்து விமல்ராஜ் அளித்த புகாரின் பேரில், சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர், சிவா, சங்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw