கோவை இருகூர் பகுதியில் காரில் வந்து வழிப்பறி- 2 பேர் கைது…

published 10 months ago

கோவை இருகூர் பகுதியில் காரில் வந்து வழிப்பறி- 2 பேர் கைது…

கோவை: கோவை ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் செல்வராஜ்(31). தொழிலாளி. இவர் தனது பைக்கில் இருகூர் மேம்பாலத்தின் கீழ் சென்றார். அப்போது காரில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றனர். 

செல்வராஜ் புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் பணத்தை பறித்தது பீளமேடு நேருநகரை சேர்ந்த சூரிய பிரசாந்த்(24), திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்த பிரிஜிஸ் பிரசாந்த்(25)என்பது தெரிய வந்தது. 

அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 கத்தி, கார் மற்றும் ரூ.5ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe