கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் வாக்குப்பதிவு...

published 1 week ago

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் வாக்குப்பதிவு...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணியிலிருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் பலரும் அவர்களது வாக்கினை அந்தந்த வாக்குச்சாவடிகளில் செலுத்தினர்.


அதன்படி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அவரது வாக்கினை செலுத்தினார், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கணபதி பகுதியில் உள்ள SES தனியார் பள்ளியில் அவரது வாக்கினை செலுத்தினார், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அவரது வாக்கினை செலுத்தினார், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் வாக்களித்தார், 

முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது வாக்கினை செலுத்தினார், பாஜக மாநில பொது செயலாளரும் திருப்பூர் பாஜக வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் சித்தாபுதூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவரது வாக்கினை செலுத்தினார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அவரது வாக்கினை செலுத்தினார்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw