தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை...

published 9 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பதினைந்து மாணவர்களுக்கு DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி உதவித்தொகை மாதம் ரூ.37,000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். கூடுதலாக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

இந்த ஆராய்ச்சி உதவித்தொகையை உழவியல் பயிர் வினையியல், பயிர் நோயியியல் வேளாண் வானிலையியல் பூச்சியியல், பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்திப் பொறியியல், மண் அறிவியல் மற்றும் வேளாண்மை வேதியியல், காடுவளர்ப்பு மற்றும் வேளாண் காடுகள், விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய துறைகளை சார்ந்த பதினைந்து மாணவர்கள் பெற்றுள்ளனர்.

எனவே DST-Inspire ஆராய்ச்சி உதவித்தொகை வென்ற ஆராய்ச்சி மாணவர்களை கவுரவிக்கும் வகையில், முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம்  அண்ணா அரங்கத்தில் துணைவேந்தர் தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.

முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் செந்தில் வரவேற்புரை வழங்கினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி தலைமை

உரையில் ஆற்றுகையில், இந்த ஆண்டிற்கான DST.Inspire ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற
மாணவர்களையும், அவர்களின் வழிகாட்டிகள் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர்களையும்
பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு INSPIRE திட்டம் பற்றி விரிவான விளக்கத்தை
வழங்கினார்.

DST Inspire (22-27) வயதுடைய மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் இரண்டிலும் ஆண்டுதோறும் 1000
மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது.

மேலும் உதவித் தொகையை பெறுவதற்கு
மாணவர் மற்றும் வழிகாட்டியின் சுயவிவரம் மற்றும் வெற்றிகரமான ஆராய்ச்சி முன்மொழிவு
ஆகிய மூன்று முக்கியமான கூறுகளை கவனிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாராட்டு கூட்டத்தில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர்
முனைவர் ரவிகேசவன், விதை மையத்தின் இயக்குனர் முனைவர் உமாராணி, பயிர்
மேலாண்மை இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் மு.க. கலாராணி இயற்கை வள மேலாண்மை
இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் பாலசுப்ரமணியம், வேளாண் பொறியியல் கல்லூரியின்
முதன்மையர் முனைவர் அ ரவிராஜ், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர்
முனைவர் அயாலசுப்ரமணியன் மற்றும் 500க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி
மாணவர்கள் உதவித்தொகை பெற்றவர்களின் வழிகாட்டிகள் மற்றும் பல்கலைக்கழக
அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe