கோவையில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா திருட்டு…

published 9 months ago

கோவையில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா திருட்டு…

கோவை: கோவையில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமராக்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் கோஷல் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட்சன்(29). 

இவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி ரிச்சர்ட்சன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் விடுமுறை என்பதால் கடைக்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை சிலர் பார்த்து ரிச்சர்ட்சனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே விரைந்து வந்து பார்த்தார். 

அப்போது உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் ரூ. 10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து அங்கு பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe